Thursday, July 26, 2012

Introduction


ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமானுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீமத் வரதகுரவே நம:


Sri:

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்நவம்

யதீந்திர ப்ரணவம்  வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்||


ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி - ஏழ்பாரும் 
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தம்முடனே சேர்ந்து.




ச்ரியபதியாய் அவாப்த சமஸ்த காமனாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதநனான சர்வேஸ்வரன், சம்சாரிகளான சேதனர் மீது இரக்கம் பிறந்து,நாம் அவனை அடைந்து நித்ய முக்தரோடே கூடி  அவனை அனுபவிக்கிற பேற்றை பெறுவதற்காக, நமக்கு கரண களேபரங்களை கொடுதருளினான்.



நாம் அக்கரணகளேபரங்களைக் கொண்டு அவனுடைய திவ்ய சரிதைகளை பேசி வாய் வெருவவும்,கைகளாரத் தொழவும்,திவ்ய தேசங்களை நாடி நடக்கவும் வேண்டும்.அப்படி இல்லாமல் உலகில் விஷயாந்தரன்களைக் கண்ட கண்களையும், பேசிய வாயையும் சுத்தி பண்ணும் பொருட்டு, சமஸ்த கல்யாண குணனான எம்பெருமானை பற்றியும், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைப் பற்றியும்  பேச எண்ணி இந்த blog எழுதுகிறேன் அடியேன்.


என்னை புவியில் ஒரு பொருளாக்கிய, அடியேனுடைய ஆசார்யன் "ஸ்ரீ உ. வே ஆத்தான் ஸ்வாமிக்கும்", ஞானாசிரியர்களான "ஸ்ரீமத் உபய வே  பிரதிவாதி பயங்கரம் சம்பத் ஸ்வாமிக்கும்" "ஸ்ரீ உ. வே. கோமடம் சம்பத் ஸ்வாமிக்கும்" அடியேன் தலை அல்லால்   கை மாறிலேன். "முயல்கின்றேன் உந்தன் மொயகழற்க்கன்பையே" என்று ஸ்ரீ மதுரகவிகள் சாதித்தருளியதர்க்கிணங்க  அடியேன் இவர்களிடத்தில் நிச்சலும் இவர்களது உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் செய்ய முடியாது தடுமாறுகிறேன். இவர்களிடத்தில் அடியேனை ஆச்ரயிக்க செய்த சர்வேஸ்வரனுக்கு நன்றியும் அஞ்சலியுமே கண்ணீருமே அடியேன் படைப்பது.



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 

No comments:

Post a Comment